மட்டு வவுணதீவுபகுதியில் மதுபான விற்பனையில் ஈடுபட்ட தாயும் மகளும் கைது

(கனகராசா சரவணன்)

மட்டு வவுணதீவு பொலிஸ் பிரிவிலுள்ள தாண்டியடி புதுமண்ட பத்தடியிலுள்ள பகுதியில் சட்டவிரோதமாக கசிப்பு மற்றும் அரச மதுபானங்களை விற்பனையில் ஈடுபட்டுவந்த இரு வீடுகளை பொலிசார் நேற்று சனிக்கிழமை (8) முற்றுகையிட்டு இரு பெண்களான தாயும் மகளையும் கைது செய்ததுடன் கசிப்பு மற்றும் மதுபானப் போத்தல்களை மீட்டுள்ளதாக வவுணதீவு பொலிசார் தெரிவித்தனர்.

பொலிசாருக்கு கிடைத்த தகவல் ஒன்றிற்கு அமைய சம்பவதினமான நேற்று மாலை குறித்த பகுதியிலுள்ள அருகருகே உள்ள இரு வீடுகளை முற்றுகையிட்டனர் இதன் போது ஒரு வீட்டில் கசிப்பு விற்பனையில் ஈடுபட்ட பெண் ஒருவரை 5 லீற்றர் கசிப்புடன் கைது செய்ததுடன்.

அருகிலுள்ள வீட்டை முற்றுகையிட்ட பொலிசார் அரச மதுபானங்களை சட்டவிரோதமாக வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த பெண் ஒருவரை 10 காப்போத்தல் மதுபானங்களுடன் கைது செய்தனர்.

இதில் கைது செய்யப்பட்ட இருவரும் தாயும் மகளும் எனவும் இவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

 

No comments: