கர்ப்பிணி தாய்மார்கள் 70 பேருக்கு கொவிட் -19 தொற்றுறுதி
கொரோனா தொற்றுறுதியான 70 கர்ப்பிணி தாய்மார்கள் தற்போது வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருவதாக சமுதாய சுகாதார வைத்திய நிபுணர் சித்ரமாலி டி சில்வா தெரிவித்துள்ளார்.
நேற்று வரையில் கொரோனா தொற்றுறுதியான 70 கர்ப்பிணி தாய்மார்கள் அடையாளம் காணப்பட்டு வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
இந்த சூழ்நிலையில் கர்ப்பிணி தாய்மார்கள் முடியுமானளவு தமது பயணங்களைக் குறைத்துக் கொள்ள வேண்டும்.
பிறந்து ஒரு மாதம் முதல் 6 மாதம் வரையிலான குழந்தைகளுக்கும் கொவிட்- 19 தொற்றுறுதியாகியுள்ளது.
மூச்சுத்திணறல் உள்ளிட்ட நோய் அறிகுறிகள் உள்ளவர்கள் வீடுகளில் இருப்பார்களாயின் அவர்கள் அருகில் குழந்தைகள் அனுமதிப்பதைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.
அத்துடன்,சிறுவர்களுக்கு எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் வகையில் வீடுகளில் செயற்பாடுகளை முன்னெடுக்குமாறும் சமுதாய சுகாதார வைத்திய நிபுணர் சித்ரமாலி டி சில்வா தெரிவித்துள்ளார்.
No comments: