நாட்டில் நேற்றைய தினம் 1,891 பேருக்கு கொரோனா
நாட்டில் மேலும் 1,891 பேர் கொரோனா தொற்றாளர்களாக நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
வெளிநாட்டிலிருந்து வருகை தந்த 48 பேரும் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 111 ஆயிரத்து 753 ஆக உயர்ந்துள்ளது.
நேற்றைய தினம் 764 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.
அதேவேளை கொரோனா தொற்றால் இதுவரை குணமடைந்துள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 97 ஆயிரத்து 242 ஆக அதிகரித்துள்ளது.
தற்போது வைத்தியசாலைகளில் மற்றும் சிகிச்சை மையங்களில் 13 ஆயிரத்து 824 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதேவேளை, இலங்கையில் இதுவரை கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 696 ஆக உயர்ந்துள்ளது.
No comments: