கடந்த 24 மணித்தியாலத்தில் 108 பேர் கைது
கடந்த 24 மணித்தியாலத்தில் மாத்திரம் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 108 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அவர்களுள் அதிகமானவர்கள் களுத்துறை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.
அதனடிப்படையில் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 3755 பேர் இதுவரையில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
No comments: