நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்கள்
நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான 535 பேர் நேற்றைய நாளில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கொவிட் 19 தொற்று பரவலை தடுப்பதற்கான தேசிய செயலணி இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
இதன்படி, பேலியகொடை மற்றும் மினுவாங்கொடை கொத்தணியுடன் தொடர்புடைய 517 பேருக்கும், சிறைச்சாலை கொத்தணியுடன் தொடர்புடைய 18 பேருக்கும், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன்படி நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 47,840 ஆக உயர்வடைந்துள்ளது.
இதேவேளை, நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து முழுமையாகக் குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 40,838 ஆக அதிகரித்துள்ளது.
அத்துடன்,6773 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதேவேளை, கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் நால்வர் உயிரிழந்துள்ளமை நேற்று இரவு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்படி கல்கிஸ்ஸ, காத்தான்குடி, வெல்லம்பிட்டிய மற்றும் ஓபநாயக்க ஆகிய பிரதேசங்களை சேர்ந்த நபர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
இதனை தொடர்ந்து கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 229 ஆக அதிகரித்துள்ளது.
No comments: