நாடு திரும்பிய இலங்கையர்கள்
கொரோனா தொற்று காரணமாக வெளிநாடுகளில் நிர்க்கதிக்குள்ளாகியிருந்த 434 இலங்கையர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தை இன்று வந்தடைந்துள்ளனர்.
அதன்படி, கட்டாரிலிருந்து 311 பேர் , ஐக்கிய அரபு எமி ரேட்ஸிலிருந்து 46 பேர் , மாலைத்தீவிலிருந்து 76 பேர் மற்றும் சீனாவிலிருந்து ஒருவரும் கட்டுநாயக்க விமான நிலையத்தை இன்று காலை வந்தடைந்ததாக கொவிட்-19 தடுப்பிற்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.
இவ்வாறு நாட்டை வந்தடைந்த அனைவருக்கும் பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு பின்னர் அனைவரும் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளுக்காக அனுப்பப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.
இதனைத் தவிர மேலும் 70 க்கும் மேற்பட்டோர் இன்றைய தினம் நாட்டுக்கு வருகை தரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், துருக்கி மற்றும் இந்தோனேஷியா ஆகிய நாடுகளிலிருந்து இன்றைய தினம் வருகை தரவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
No comments: