நேற்றைய தினம் கம்பஹா மாவட்டத்திலேயே அதிகளவானோர் தொற்றாளர்களாக பதிவு
இலங்கையில் நேற்றைய தினம் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்ட 695 பேரில் 168 பேர் கம்பஹா மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என கொவிட்-19 தடுப்பிற்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.
கொழும்பு மாவட்டத்தில் 147 பேர், கண்டி மாவட்டத்தில் 90 பேர் , களுத்துறை மாவட்டத்தில் 34 பேர், கேகாலை மாவட்டத்தில் 25 பேர், அவிசாவெல்ல பகுதியில் 24 பேர் நேற்றைய தினம் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர் .
வவுனியா மாவட்டத்தில் 23 பேர், மன்னார் மாவட்டத்தில் 20 பேர், குருணாகல் மாவட்டத்தில் 18 பேர் , இரத்தினபுரி மாவட்டத்தில் 17 பேர் , மாத்தறை மாவட்டத்தில் 17 பேர், அம்பாறை மாவட்டத்தில் 16 பேர் , புத்தளம் மாவட்டத்தில் 11 பேர் , அம்பாந்தோட்ட மாவட்டத்தில் 10 பேர் நேற்றைய தினம் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர் .
பொலன்னறுவை மாவட்டத்தில் 08 பேர், மாத்தளை மாவட் டத்தில் 05 பேர், பதுளை மாவட்டத்தில் 04 பேர், அனுராதபுர மாவட்டத்தில் 03 பேர், நுவரெலியா மாவட்டத்தில் 03 பேர் , திருகோணமலை மாவட்டத்தில் 03 பேர் நேற்றைய தினம் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர் .
அத்துடன் வெளிநாட்டிலிருந்து வருகை தந்த 12 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அத்துடன் மேலும் 27 பேர் அடங்கலாக நேற்றைய தினம் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர் என கொவிட்-19 தடுப்பிற்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.
No comments: