நாட்டில் மேலும் 6 கொரோனா மரணங்கள் பதிவு


நாட்டில்  மேலும் 6 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன.

அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 270 ஆக அதிகரித்துள்ளது.

அதன்படி, கொழும்பு 03 பிரதேசத்தைச் சேர்ந்த 63 வயதுடைய பெண்ணொருவரும், கொழும்பு 15 பிரதேசத்தைச் சேர்ந்த 80 வயதுடைய ஆணொருவரும், முகத்துவாரம் பிரதேசத்தைச் சேர்ந்த 75 வயதுடைய ஆணொருவரும், தெற்கு களுத்துறை பிரதேசத்தைச் சேர்ந்த 65 வயதுடைய ஆணொருவரும், தெஹிவளை பிரதேசத்தைச் சேர்ந்த 63 வயதுடைய ஆணொருவரும மற்றும் இரத்தினபுரி பிரதேசத்தைச் சேர்ந்த 65 வயதுடைய ஆணொருவரும் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

No comments: