நாட்டில் மேலும் 3 கொரோனா மரணங்கள் பதிவு
நாட்டில் மேலும் 3 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன.
அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 225 ஆக அதிகரித்துள்ளது.
அதன்படி, கொழும்பு 14 பிரதேசத்தை சேர்ந்த 75 வயதுடைய ஆண் ஒருவரும் இரத்தினபுரி பிரதேசத்தை சேர்ந்த 72 வயது ஆண் ஒருவரும் மற்றும் ஹொரணை பிரதேசத்தை சேர்ந்த 87 வயதுடைய பெண் ஒருவரும் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
No comments: