நாட்டில் மேலும் 2 கொரோனா மரணங்கள் பதிவு
நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 2 பேர் உயிரிழந்துள்ளமை சற்றுமுன்னர் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்படி இரத்தினபுரி பிரதேசத்தை சேர்ந்த 71 வயதான ஆண் ஒருவர் கடந்த 2ம் திகதியும், 86 வயதான ஆண் ஒருவர் கடந்த முதலாம் திகதியும் உயிரிழந்துள்ளார்.
அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 215 ஆக அதிகரித்துள்ளது.
No comments: