நாட்டில் நேற்றைய தினம் மாத்திரம் 14 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பி.சி.ஆர் பரிசோதனைகள் முன்னெடுப்பு


கொரோனா தொற்று நோயாளிகளை அடையாளம் காண நாட்டில் நேற்றைய தினம் மாத்திரம் 14 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பி.சி.ஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

அதன்படி 14 ஆயிரத்து 600 பி.சி.ஆர் சோதனைகள் நேற்றைய தினம் நடத்தப்பட்டதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு அறிவித்துள்ளது.

அதன்படி கடந்த பெப்ரவரி மாதம் 18 ம் திகதியில் இருந்து இதுவரை நாட்டில் 12 இலட்சத்து 65 ஆயிரத்து 17 பி.சி.ஆர். பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இவற்றில் டிசம்பர் மாதம் 11ம் திகதியே அதிக எண்ணிக்கையிலான அதாவது 17 ஆயிரத்து 425 பி.சி.ஆர். பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments: