அம்பாறையில் சீரற்ற காலநிலை - ஆலையடிவேம்பில் அதிக மழை
அம்பாறை மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக சீரற்ற காலநிலை நிலவுவதை அவதானிக்க முடிகின்றது.
நேற்று பகல் வேளை முதல் சீரற்ற காலநிலை நிலவி வருவதுடன் இன்று காலை முதல் இருள் நிறைந்த சூழலில் நிலவுவதுடன் அதிகரித்த மழை வீழ்ச்சியை காணக்கூடியதாக உள்ளது.
இதனால் அம்பாறை மாவட்டத்தில் உள்ள தாழ் நிலப்பகுதிகளில் வெள்ள நீர் தேங்கியுள்ளதை அவதானிக்க முடிகின்றது.
மேலும் ஆலையடிவேம்பு பிரதேசத்தில் இன்று காலை வேளை முதல் அதிகரித்த மழை வீழ்ச்சியால் மக்களின் அன்றாட செயற்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments: