நாடு திரும்பிய இலங்கையர்கள்


கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக வெளிநாடுகளில் தங்கியிருந்த 420 இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளனர்.

அதன்படி, ஜேர்மனியிலிருந்து 267 பேர், ஐக்கிய அரபு இராச்சியிலிருந்து 48 பேர் கட்டாரிலிருந்தும் 57 பேர் கட்டுநாயக்க விமான நிலையத்தை இன்று காலை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு நாட்டை வந்தடைந்த அனைவருக்கும் பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதன் பின்னர் அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments: