ஊடகவியலாளர் லங்கேஷ் மிக எழிய முறையில் இன்று தனது பிரச்சார நடவடிக்கைகளை முன்னெடுத்தார்


தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற வேட்பாளர் ஊடகவியலாளர் முன்னாள் சூரியன் அறிவிப்பாளர் லங்கேஷ் இன்று தனது தேர்தல் பிரச்சார நடவடிக்கையை டயகம இரண்டாம் பிரிவில் அமைந்துள்ள குண்டாங்கள் முனி ஆலயத்தில் தமது குலதெய்வ வழிபாட்டுடன் ஆரம்பித்தார்.

அதனை தொடர்ந்து டயகம இரண்டாம் பிரிவு அம்மன் ஆலயம் டயகம முதலாம் பிரிவு அம்மன் ஆலயத்திலும் தமது பூஜை வழிபாடுகளை செய்ததுடன் மலையத்துக்காக தமது சேவை தொடரும் என்ற உறுதிமொழியுடன் தனது பிரச்சாரத்தினை மிக எழியமுறையில்  முன்னெடுத்தார் இந்த நிகழ்வில் லங்கேஷ் அவர்களின் தாய் தந்தை உட்பட தோட்ட மக்களும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

-லங்கேஷ் ஊடகப்பிரிவு-








No comments: