இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம்


வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தற்போது காணப்படும் மழையுடனான வானிலை  சில நாட்களுக்கு மேலும் அதிகரிக்கும் என  தெரிவிக்கப்படுகின்றது.

சப்கரமுவ,மத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களின் சில பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பொழிய கூடும் என தெரிவிக்கப்படுகின்றது.

நாட்டின் ஏனைய பிரதேசங்களின் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments: