திருமலை சம்பவம் - சமமான சட்டம் பாய வேண்டும் மனோ எம்.பி
எம்பி கஜேந்திரன் மீது திருகோணமலையில் நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவத்தையும், எம்பி உதிக பிரேமரத்ன மீதான அனுராதபுர துப்பாக்கி சூட்டு சம்பவத்தையும் ஒரே மாதிரியான சட்டம், ஒழுங்கு பிரச்சினையாக கருதி, விசாரித்து, குற்றவாளிகளை கைது செய்யுங்கள் என பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் விடயத்திற்கு பொறுப்பான அமைச்சருக்கு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் சட்டம், ஒழுங்கு துறை அமைச்சர் டிரன் அலசிடம் தான் விளக்கியதாகவும் சம்பவம் தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் தன்னிடம் உறுதியளித்துள்ளதாகவும் மனோ எம்பி மேலும் குறிப்பிட்டார்.
இதுபற்றி தற்சமயம் சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தனவுக்கும் தொலைபேசியில் தொடர்புற்று அறிவித்துள்ளதாகவும் தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.
No comments: