இந்துக்களுக்கு இடையிலான சமர் ஆரம்பம் -
இந்துக்களுக்கு இடையிலான மாபெரும் சமர் என்று வர்ணிக்கப்படும் கொழும்பு இந்துக் கல்லூரி மற்றும் யாழ்ப்பாணம் இந்து கல்லூரிகளுக்கு இடையிலான மாபெரும் கிரிக்கெட் போட்டி 12வது தடவையாக இம்முறை கொழும்பு பி சாரா ஓவல் எனப்படும் பி. சரவணமுத்து சர்வதேச கிரிக்கெட் அரங்கில் இன்றைய தினம் ஆரம்பமானது.
இலங்கை கிரிக்கெட் வரலாற்றில் சரித்திர முக்கியத்துவம் பெற்ற பி சரவணமுத்து சர்வதேச கிரிக்கெட் அரங்கானது, இலங்கையின் முதலாவது டெஸ்ட் போட்டியை நடத்திய மைதானமாகவும், இலங்கை அணியின் முதலாவது டெஸ்ட் வெற்றியினை பெற்றுக் கொண்ட மைதானமாகவும் பிரசித்தி பெற்ற இம் மைதானத்தில் இந்துக்களின் பெருஞ்சமர் கிரிக்கெட் போட்டி நடைபெறுவது ஓர் சிறப்பம்சமாகும்.
இன்றைய தினம் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற கொழும்பு இந்துக்கல்லூரிய அணி யாழ்ப்பாணம் இந்து கல்லூரி அணியினை துடுப்பெடுத்தாட அழைத்திருந்தது
அந்த வகையிலும் திறமையான பல வீரர்களைக் கொண்ட இந்த இரு அணியினரும் தங்களது கிரிக்கெட் பல பரிட்சையை பார்த்துக் கொள்ளும் முகமாக போட்டியை மிகவும் விறுவிறுப்பாக ஆரம்பித்தார்கள். கொழும்பு மற்றும் யாழ்ப்பாண இந்துக்கல்லூரி மாணவர்கள், பழைய மாணவர்கள், பெற்றோர்கள், கிரிக்கெட் ஆதரவாளர்கள் என பல ரசிகர்கள் மைதானத்தில் நிறைந்து இருந்ததை காணக்கூடியதாய் இருந்தது.
பப்பரே மேளங்கள் முழங்க கிரிக்கெட் ரசிகர்கள் ஆரவாரம் செய்தபடி இரு அணியினரையும் உற்சாகப்படுத்தியமை குறிப்பிடத்தக்கது...
தொடர்ந்தும் இன்று மாலை வரை இந்த கிரிக்கெட் போட்டி நடைபெற்று நாளைய இறுதி தினத்தில் சிறப்பான ஆட்டத்தை மேற்கொள்ளும் பட்சத்தில் வெற்றி தோல்வியினை இரு அணிகளும் உறுதிப்படுத்திக் கொள்ளும் வாய்ப்பு உள்ளதாக கிரிக்கெட் வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.
யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி அணியின் சிறப்பான பந்து வீச்சுக் காரணமாக கொழும்பு இந்துக் கல்லூரி அணி முதலாவது இன்னிங்சில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 49 ஓட்டகளை மாத்திரமே பெற்றுக்கொண்டது.
இதனை தொடர்ந்து பலோ ஓண் முறையில் கொழும்பு இந்துக் கல்லூரி அணி இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடியது.
கொழும்பு இந்துக் கல்லூரி அணி சார்பில் துடுப்பாட்டத்தில் அதிகபட்சமாக அணித்தலைவர் டிலோஜன் 17 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்திருந்தார்.
யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி அணி சார்பில் பந்து வீச்சில் கஜாநாத் 5 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.
இந்துக்களின் மாபெரும் சமர் என வர்ணிக்கப்படுகின்ற கொழும்பு இந்துக் கல்லூரி மற்றும் யாழ்ப்பாணம் இந்து கல்லூரிகளுக்கு இடையிலான
மாபெரும் கிரிக்கெட் போட்டி, 12வது தடவையாக 2023ஆம் ஆண்டு கொழும்பு சரவணமுத்து சர்வதேச கிரிக்கெட் அரங்கில் இன்றைய தினம் ஆரம்பமாகி நடைபெற்றது.
இன்றைய தினம் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற கொழும்பு இந்துக் கல்லூரி அணி முதலில் பந்து வீச்சினை தெரிவு செய்திருந்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய யாழ்ப்பாணம் இந்து கல்லூரி அணி சகல விக்கெட்டுக்களையும் இழந்து 182 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.
தொடர்ந்து கொழும்பு இந்துக் கல்லூரி அணி துடுப்பெடுத்தாடிய நிலையில்
இன்றைய முதல் நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்துள்ளது.
கொழும்பு இந்துக்கல்லூரி இரண்டாவது இன்னிங்சில் 15 ஓவர்கள் நிறைவில் விக்கெட் இழப்பின்றி 41 ஓட்டங்களை பெற்றதுடன் இரண்டாம் நாள் ஆட்டம் நாளை நடைபெறவுள்ளதுடன் இரண்டு நாள் போட்டியாக இந்த தொடர் நடைபெறுகின்றமையுமையும் குறிப்பிடத்தக்கது.
No comments: