சுங்கத்துறையினரிடம் சிக்கிய சட்டவிரோதமாக இறக்குமதியான தொலைக்காட்சிகள் மற்றும் குளிரூட்டிகள்


சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட தொலைக்காட்சிகள் மற்றும் குளிரூட்டிகளின் ஒரு தொகுதியை சுங்கத்துறை கைப்பற்றியுள்ளது.

ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து பயன்படுத்தப்பட்ட உபகரணங்கள் எனக் கூறி இந்நாட்டிற்கு 68 தொலைக்காட்சிப் பெட்டிகள், 77 குளிரூட்டிகள், பயன்படுத்தப்பட்ட டயர்கள் உள்ளிட்ட பொருட்கள் இந்நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக சுங்கம் தெரிவித்துள்ளது.

இலங்கை சுங்க மத்திய சரக்கு ஆய்வுப் பிரிவின் அதிகாரிகள் குறித்த பொருட்களைக் கைப்பற்றியதாக பிரதி சுங்கப் பணிப்பாளர் ஆர்.எஸ்.வீரசிறி தெரிவித்துள்ளார்.









No comments: