அரிசியின் விலை குறைப்பு?
நாட்டில் அரிசி விலைகளில் மாற்றம் ஏற்படக்கூடிய சாத்தியங்கள் காணப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நெல் கொள்வனவு செய்யும் போது விதிக்கப்படும் சமூகப் பாதுகாப்பு வரி நீக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சமர்ப்பித்த அமைச்சரவை பத்திரத்திற்கு அமைய இந்த வரி நீக்கப்பட்டுள்ளன.
சந்தையில் வரி நீக்கத்தின் அடிப்படையில் அரிசி விலையில் குறிப்பிடத்தக்களவு மாற்றம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
நிதி ராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய விவசாயிகளுக்கு நெல்லுக்கான கூடுதல் விலையையும், நுகர்வோருக்கு அரிசிக்கான குறைந்த விலையையும் உறுதி செய்யும் வகையில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
No comments: