தேசிய மக்கள் சக்தியினால் கல்முனையில் பாரிய ஆர்ப்பாட்டம்.

 எஸ்.அஷ்ரப்கான்)

கல்முனை மாநகர சபையில் வரிப்பண மோசடியாளர்களைஇனம் கண்டு, தொடர்புடையவர்களை சட்டத்தின் முன் நிறுத்தக் கோரி பாரிய ஆர்ப்பாட்டம் இன்று (13) மாலை 05 மணியளவில் கல்முனை பஸ்தரிப்பு நிலையத்துக்கு அருகாமையில் மாநகர சபை முன்பாக இடம்பெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தின் போது பல்வேறுபட்ட ஊழல்களை செய்த கல்முனை மாநகர ஊழியர்கள் உட்பட இது தொடர்பில் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் இருந்த முதல்வர், கணக்காளர் என பல்வேறு தரப்பினரையும் மக்கள் மன்றுக்கு கொண்டு வருவதாக கூறி, பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றமை சுட்டிக்காட்டத்தக்கது





No comments: