தேர்தல் தொடர்பில் ஆணைக்குழுவின் முக்கிய அறிவிப்பு
தபால் மூல வாக்களிப்பு நடவடிக்கையை காலவரையறையின்றி ஒத்திவைக்க தேர்தல் ஆணைக்குழு தீர்மானித்ததுடன், அதற்கான அடிப்படை நடவடிக்கைகள் தொடர்பில் சம்பந்தப்பட்ட நிர்வாக பிரிவுகளுக்கு தேர்தல் ஆணையாளர் நாயகம் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
இது தொடர்பான கடிதம் அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகள் மற்றும் அனைத்து மாவட்ட துணை மற்றும் உதவி தேர்தல் அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
அதன்படி, எதிர்வரும் திங்கட்கிழமை முதல் அனைத்து ஊழியர்களுக்கும் சாதாரண அலுவலக நேரம் அறிவிக்கப்பட்டுள்ளதுடன், தேர்தல் கடமைகளுக்கான மேலதிக நேர வேலைகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளன.
No comments: