நெல் கொள்வனவு தொடர்பில் புதிய சுற்றிக்கை
அரசாங்கத்தின் நெல் கொள்முதல் திட்டத்தை ஆரம்பிக்கத் தேவையான நிதி குறித்து மாவட்ட செயலாளர்களினால் திறைசேரி அபிவிருத்தி நிதித் திணைக்களத்திற்கு அறிவிக்கப் பட வேண்டும்.
இதன்படி, அபிவிருத்தி நிதித் திணைக்களத்தினால் நேரடியாக மாவட்ட செயலாளர்களுக்கு திறைசேரி நிதியை ஒதுக்க தேசிய வரவு செலவு த் திணைக்களத்திற்கும் தேவை யான முற்பணத்தை வழங்க, திறைசேரி செயற்பாட்டு திணைக்களத்திற்கும் அறிவுறுத்தல் வழங்கப்படும்.
இதன்படி, தேசிய வரவு செலவுத் திணைக்களம் அந்தந்த மாவட்டச் செயலாளர்களுக்கு நேரடியாக வரவு செலவுத் திட்ட ஒதுக்கீடுகளை வழங்கு வதுடன் திறை சேரி செயற் பாட்டுத் திணைக்களம் குறித்த மாவட்டச் செயலாளர்களுக்கு நெல் கொள்வனவு செய்வதற்கான முற்பணத்தை வழங்கும். நெல் கொள்முதல் திட்டத்துக்கான நிதி, தேவைக்கு ஏற்ப அவ்வப்போது திறைசேரியால் வழங்கப்படும்.
தங்கள் மாவட்டத்தில் உள்ள விவசாயிகளிடமிருந்து மாத்திரமே நெல் கொள்முதல் செய்யப்படுவதை அனைத்து மாவட்டச் செயலாளர்களும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
சம்பந்தப்பட்ட விவசாயிகளின் பெயரில் வழங்கப்பட் ட கட்டணச் சான்றிதழை ழை இலங்கை வங்கி, மக்கள் வங்கி அல்லது பிரதேச அபிவிருத்தி வங்கிக் கிளையில் சமர்ப்பிக்கும் போது, சம்பந்தப்பட்ட வங்கியினால் விவசாயிக ளின் வங்கிக் கணக்கில் தேவையான தொகையை உடனடியாக வரவு வைக்கும்.
பெரும் போகத்தில் கொள்வனவு செய்யப்படும் நெல் கையிருப்பு அரிசாக மாற்றப்பட்டு அடையாளம் காணப்பட்ட குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களை உள்வாங்கும் வகையில், ஒரு குடும்பத்திற்கு மாதம் ஒன்றுக்கு 10 கிலோ வீதம் இரண்டு மாத காலத்திற்கு வழங்கப்படும்.
மேலும் இது தொடர்பான அறிவுறுத்தல்கள் மகளிர், சிறுவர் விவகாரம் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சி னால் வெளியிடப்படும்.
நெல் கொள்முதல் திட்டத்தை வெற்றியடையச் செய்ய மாவட்டச் செயலாளர்கள் மேற்கொள்ள வேண்டிய,நடவடிக்கைகள் தொடர்பான ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ள தோடு களஞ்சியத் திலுள்ள நெல் மற்றும் அரிசி கையிருப்புகளை பாதுகாப்பதற்கு சிவில் பாதுகாப்புத் திணைக்கள அதிகாரிகளை ஈடுபடுத்துதல், நெல் கொள்வனவின் போது செயல்பாட்டு செலவுகள் குறித்த தொடர்பான நிதி விதி முறைகள், சுற்றறிக்கைகள் மற்றும் ஏனைய அரச அனுமதிகளுக்கு உட்பட்டு செயற்படுவதற்கு அதிகாரி ஒருவரை நியமிப்பதும் இதில் அடங்கும்.
இந்தத் திட்டத்தை தேசிய முன்னுரிமையா கக் கருதி அரச செலவை மட்டுப் படுத்தி, அறுவடைக் காலத்தில் முழு அரச சேவையும் அர்ப்பணிப் புடனும் முன்மாதிரியா கவும் செயல்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
No comments: