விமான நிலையத்தில் கைத்துப்பாக்கி வைத்திருந்த நபர் கைது

கம்பளை பிரதேசத்தை சோ்ந்த 49 வயதான நபர் ஒருவர் பஹ்ரைனுக்கு விமானமூலம் செல்லவதற்காக கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வந்த போது பயணபொதியை விமான நிலைய பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் சோதனைச் செய்தபோது மறைத்துவைக்கப்பட்டிருந்த கைத்துப்பாக்கி ஒன்றை கண்டுபிடித்துள்ளனர்.

குறித்த நபரை கைது செய்து கைத்துப்பாக்கியை மீட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்

கைது செய்யப்பட்டவரை விசாரணையின் பின்னர் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விமான நிலைய பொலிஸார் தெரிவித்தனர்.




No comments: