மாளிகாவத்தை பகுதியில் இளைஞன் உயிரிழப்பு
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் இளைஞன் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
போதைப்பொருள் தகராறு காரணமாக மாளிகாவத்தை அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் 24 வயதுடைய இளைஞர் இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.
தனது போதைப்பொருளை திருடியதாக கூறி வெல்லம்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் வந்து இளைஞனை அழைத்துச் சென்று அவரை மோசமாக தாக்கியுள்ளமை தெரியவந்துள்ளது.
மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
No comments: