ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களை ஏற்றிச் சென்ற பேருந்து கவிழ்ந்து விபத்து.

பன்வில மடோல்கெலேயில் இருந்து உனனகல செல்லும் வீதியில் டிஜிஎம் தோட்ட பங்களாவிற்கு அருகில் பஸ்ஸொன்றும் கவிழ்ந்துள்ளது.  நேற்று பிற்பகல் சாரதியின் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் பேரூந்து வீதியை விட்டு விலகிச் சென்றதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 விபத்தின் போது பேருந்தில் 28 பேர் பயணித்துள்ளதுடன் காயமடைந்த 20 பேர் மடோல்கெலே பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 அந்த குழுவில் ஒருவரும் 7 பெண்களும் மேலதிக சிகிச்சைக்காக கண்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.  பன்வில பிரதேசத்தில் ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களை ஏற்றிச் சென்ற பேருந்தே இவ்வாறு  விபத்துக்குள்ளாகியுள்ளது.




No comments: