நாலக கொடஹேவா உட்பட மூவர் விடுதலை.

இலங்கை பரிவர்த்தனை மற்றும் பத்திரங்கள் ஆணைக்குழுவின் தலைவராக கடமையாற்றிய போது, ​​ஆணைக்குழுவின் நிதியில் இருந்து 50 இலட்சம் ரூபாவை "தாருண்யட ஹெடக்" அமைப்பிற்கு வழங்கி அரசாங்க நிதியை குற்றவியல் முறையில் பயன்படுத்தியதாகவே இவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டது.  

 கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி அமல் ரணராஜா இந்த தீர்ப்பை வழங்கியுள்ளார்.நீண்ட விசாரணைக்கு பிறகே உயர்நீதிமன்ற நீதிபதி தீர்ப்பை அறிவித்தார்.

 தீர்ப்பை அறிவித்த நீதிபதி, பிரதிவாதிகளுக்கு எதிரான குற்றச்சாட்டை நிரூபிக்க அரசுத் தரப்பு முன்வைத்த ஆதாரங்கள் போதுமானதாக இல்லை என்று தெரிவித்துள்ளார்.

 அதன்படி, பிரதிவாதிகள் விடுவிக்கப்படுவதாக உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 விடுவிக்கப்பட்ட ஏனைய பிரதிவாதிகளில் முன்னாள் பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழுவின் பிரதிப் பணிப்பாளர் நாயகம் தம்மிக்க பெரேரா மற்றும் தாருண்யட ஹெடக்கின் ரோனி இப்ராஹிம் ஆகியோர் அடங்குவர்.

 கடந்த நல்லாட்சிகால அரசாங்கத்தின் போது நாலக கொடஹேவா உள்ளிட்ட மூன்று பிரதிவாதிகளுக்கு எதிராக சட்டமா அதிபரினால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.



No comments: