கிளிநொச்சியில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக 29 வேட்புமனுக்கள் தாக்கல்.

 2023ம் ஆண்டுக்கான உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் கடந்த புதன்கிழமை(18) தொடக்கம் ஆரம்பமாகியது.

இதற்கான அவகாசம் இன்று(21) சனிக்கிழமை நண்பகல் 12.00மணியுடன் நிறைவடைந்தது.

இந்நிலையில், கிளிநொச்சி மாவட்டத்தில் பச்சிலைப்பள்ளி பிரதேச சபைக்கு 09 கட்சிகளும் , 01சுயேட்சைக் குழுவும் வேட்பு மனுக்களை ஒப்படைத்துள்ன.

மேலும் பூநகரி பிரதேச சபைக்கு 07 கட்சிகள் வேட்பு மனுக்களை ஒப்படைத்துளன.

கரைச்சி பிரதேச சபைக்கு 11கட்சிகளும் 01சுயேட்சைக் குழுவும் வேட்பு மனுக்களை ஒப்படைத்துள்ன.

இதேவேளை, கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக 10 கட்சிகளும், 02 சுயேட்சைக் குழுக்களும் அடங்களாக 32 கட்டுப் பணங்கள் செலுத்தபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மாவட்ட ஊடகப் பிரிவு,

மாவட்ட செயலகம்,

கிளிநொச்சி.



No comments: