இன்று ஒரு நாள் சேவை இடம் பெறாது


ஒரு நாள் சேவையின் கீழ் தேசிய அடையாள அட்டை (NIC) விநியோகம் இன்று (12) இடம்பெறாது என ஆட்பதிவு திணைக்களம் அறிவித்துள்ளது. 

 பொலிஸ் ஊரடங்குச் சட்டத்தை காலை முதல் நாளுக்கு நீக்கிய பின்னர் பிற்பகல் 2.00 மணிக்கு மீண்டும் அமுல்படுத்த அரசாங்கம் தீர்மானித்ததன் காரணமாகவே இந்தத் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் வியானி குணதிலக்க தெரிவித்துள்ளார். 

 மதியம் ஊரடங்குச் சட்டம் அமுலுக்கு வரும் போது மக்கள் போக்குவரத்தில் சிரமங்களை எதிர்கொள்வார்கள் என்றார். எனவே, நாளைய தினத்திற்கு நேரத்தை ஒதுக்கியிருந்தவர்கள், வேறு எந்த வேலை நாளிலும் தங்கள் சேவைகளைப் பெற, திணைக்களத்திற்குச் செல்ல முடியும் எனதிணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார். 


No comments: