தனி நபர்கள் எரிபொருளை இறக்குமதி செய்ய அனுமதி ?



நாட்டிலுள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட துறைகள் தங்களுக்குத் தேவையான எரிபொருள் இருப்புகளை தனித்தனியாக இறக்குமதி செய்து பயன்படுத்த அனுமதிக்க அரசாங்கம் தீர்மானித் துள்ளது.

இதன்படி, 2002 ஆம் ஆண்டின் 33 ஆம் இலக்க பெற்றோலியப் பொருட்கள் (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தை திருத்துவதற்கான முன்மொழிவுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

எரிசக்தி அமைச்சர் சமர்ப்பித்த அமைச்சரவைப் பத்திரத்தின்படி, அடையாளம் காணப்பட்ட தரப்பினருக்கு அனுமதிப்பத்திரம் வழங்குவதற் கான ஏற்பாடுகளை உருவாக்கி, பெற்றோலியப் பொருட்கள் (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தை திருத்துவதற்கான சட்ட வரைபை உருவாக்க சட்ட வரைவாளர் பணிக்கப்படுவார்கள்.

No comments: