காத்தான்குடி பகுதியில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட இருவர் கைது
( கனகராசா சரவணன்)
மட்டக்களப்பு காத்தான்குடி பகுதில் வீடு உடைத்து 12 பவுண் தங்க ஆபரணங்கள் மற்றும் ஒரு இலச்சம் ரூபா பணத்தை கொள்ளையடித்துச் சென்ற கொள்ளையர்கள் தங்க ஆபரணங்களை அக்கரைப்பற்றில் நகைக்கடையில் விற்பனை செய்ய முற்பட்ட காத்தான்குடியை சேர்ந்த இரு கொள்ளையர்களை இன்று ஞாயிற்றுக்கிழமை (02) கைது செய்துள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.
கடந்த வருடம் டிசம்பர் மாதம் 12 ம் திகதி இரவு காத்தான்குடி மீன்பிடி இலாகா வீதியிலுள்ள வீடு ஒன்றின் மலசலகூட கூரையை உடைத்து உள்நுழைந்து அலுமாரியில் இருந்த 12 இலச்சத்து 90 ஆயிரம் ரூபா பெறுமதியான 12 பவுண் தங்க ஆபரணங்கள் மற்றும் ஒரு இலச்சம் ரூபா பணத்தை கொள்ளையடித்துச் சென்றுள்ளர்.
இதனை தொடர்ந்து குறித்த வீட்டின் உரிமையாளர் அவரது உறவினர் ஒருவரின் மகன் ஒருவன் போதைவஸ்துக்கு அடிமையாகியிருந்தவர் மீது சந்தேகம் கொண்டு அவர்களுடன் ஏற்பட்ட முரண்பாட்டினையடுத்து அவர்கள் தங்கள் மகனுக்கும் இந்த கொள்ளைக்கும் எதுவித சம்மந்தமும் கிடையாது என குறிப்பிட்டார்
இதனையடுத்து தங்கஆபரணங்களை கொள்ளை கொடுத்தவர் நேற்று முன்தினம் சனிக்கிழமை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு தெரிவித்ததையடுத்து பெரும் குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி சப்இன்பெக்டர் வை.விஜயராஜா தலைமையிலான பொலிசார் விசாரணையில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் அக்கரைப்பற்றில் திருமணம்முடித்துள்ள காத்தான்குடியைச் சேர்ந்த ஒருவர் அக்கரைப்பற்று நகைக்கடை ஒன்றில் டொலர் எனப்படும் தங்க ஆபரணம் ஒன்றை விற்பனை செய்ய சென்றுள்ள நிலையில் நகைக்கடை உரிமையாளர் பொலிசாருக்கு தகவல் ஒன்றை வழங்கியதையடுத்து பொலிசார் குறித்த தங்க ஆபரணத்தை விற்பனை செய்ய சென்றவரை மடக்கிபிடித்து கைது செய்து விசாரணையில் காத்தான்குடியில் உள்ள வீடு ஒன்றில் கொள்ளையிட்டுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து கைது செய்யப்பட்டவருடன் கொள்ளையில் ஈடுபட்ட 25 வயதுடைய ஒருவரை காத்தான்குடியில் வைத்து கைது செய்ததையடுத்து கொள்ளையடிக்கப்பட்ட இருவரிடமிருந்து 6 பவுண் தங்க ஆபரணங்களை இதுவரை மீட்டுள்ளதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.
இதில் கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்.
மட்டக்களப்பு காத்தான்குடி பகுதில் வீடு உடைத்து 12 பவுண் தங்க ஆபரணங்கள் மற்றும் ஒரு இலச்சம் ரூபா பணத்தை கொள்ளையடித்துச் சென்ற கொள்ளையர்கள் தங்க ஆபரணங்களை அக்கரைப்பற்றில் நகைக்கடையில் விற்பனை செய்ய முற்பட்ட காத்தான்குடியை சேர்ந்த இரு கொள்ளையர்களை இன்று ஞாயிற்றுக்கிழமை (02) கைது செய்துள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.
கடந்த வருடம் டிசம்பர் மாதம் 12 ம் திகதி இரவு காத்தான்குடி மீன்பிடி இலாகா வீதியிலுள்ள வீடு ஒன்றின் மலசலகூட கூரையை உடைத்து உள்நுழைந்து அலுமாரியில் இருந்த 12 இலச்சத்து 90 ஆயிரம் ரூபா பெறுமதியான 12 பவுண் தங்க ஆபரணங்கள் மற்றும் ஒரு இலச்சம் ரூபா பணத்தை கொள்ளையடித்துச் சென்றுள்ளர்.
இதனை தொடர்ந்து குறித்த வீட்டின் உரிமையாளர் அவரது உறவினர் ஒருவரின் மகன் ஒருவன் போதைவஸ்துக்கு அடிமையாகியிருந்தவர் மீது சந்தேகம் கொண்டு அவர்களுடன் ஏற்பட்ட முரண்பாட்டினையடுத்து அவர்கள் தங்கள் மகனுக்கும் இந்த கொள்ளைக்கும் எதுவித சம்மந்தமும் கிடையாது என குறிப்பிட்டார்
இதனையடுத்து தங்கஆபரணங்களை கொள்ளை கொடுத்தவர் நேற்று முன்தினம் சனிக்கிழமை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு தெரிவித்ததையடுத்து பெரும் குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி சப்இன்பெக்டர் வை.விஜயராஜா தலைமையிலான பொலிசார் விசாரணையில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் அக்கரைப்பற்றில் திருமணம்முடித்துள்ள காத்தான்குடியைச் சேர்ந்த ஒருவர் அக்கரைப்பற்று நகைக்கடை ஒன்றில் டொலர் எனப்படும் தங்க ஆபரணம் ஒன்றை விற்பனை செய்ய சென்றுள்ள நிலையில் நகைக்கடை உரிமையாளர் பொலிசாருக்கு தகவல் ஒன்றை வழங்கியதையடுத்து பொலிசார் குறித்த தங்க ஆபரணத்தை விற்பனை செய்ய சென்றவரை மடக்கிபிடித்து கைது செய்து விசாரணையில் காத்தான்குடியில் உள்ள வீடு ஒன்றில் கொள்ளையிட்டுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து கைது செய்யப்பட்டவருடன் கொள்ளையில் ஈடுபட்ட 25 வயதுடைய ஒருவரை காத்தான்குடியில் வைத்து கைது செய்ததையடுத்து கொள்ளையடிக்கப்பட்ட இருவரிடமிருந்து 6 பவுண் தங்க ஆபரணங்களை இதுவரை மீட்டுள்ளதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.
இதில் கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்.
No comments: