அம்பாறை கோமாரி பிரதேசத்தில் நேற்றிரவு யானைகள் அட்டகாசம்
அம்பாறை மாவட்டம் பொத்துவில் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள கோமாரி பிரதேசத்தில் நேற்றிரவு யானைகள் பிரதேச மக்களின் உடமைகளை சேதப்படுத்தியுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவித்தனர்.
கடந்த காலங்களில் யானைத்தொல்லைகள் குறித்த பகுதியில் அதிகரித்து காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
கோமாரி பிரதேசத்தில் கச்சான், சோழன் போன்ற மேட்டு நிலப் பயிர்ச்செய்கை போகத்திற்கு போகம் மேற்கொள்ளப்படும் நிலையில் யானைதொல்லை காரணமாக பிரதேச மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்கிறியாக்கப்படுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments: