அக்கரைப்பற்றில் ஒரு மாத்தில் 4 கொள்ளைச் சம்பவங்கள்

(கனகராசா சரவணன்)



அம்பாறை அக்கரைப்பற்றில் பொலிஸ் பிரிவிலுள்ள தமிழ் பிரதேசத்தில் கடந்த ஒரு மாதத்தில் 4 வீடுகளில் உறங்கி கொண்டிருந்த பெண்களின் கழுத்தில் இருந்து கொள்ளையர்கள் தாலிகொடிகளை அறுத்து கொள்ளையிட்டுள்ள சம்பவங்களையடுத்து பிரதேசத்தில் மக்கள் அச்சத்தில் இரவு பொழுதை கழித்துவருகின்றனர்.

அக்கரைப்பற்று குருக்கள் வீதுp வாச்சிக்குடா, ஆலையடிவேம்பு மற்றும் வை.ம்.சி.ஏ வீதியில் நீதவான் ஒருவரின் வீடு உட்பட ஒரு மாத்தில் 4 வீடுகளில் நள்ளிரவில் யன்னல்வழியாக கொள்ளையர்கள் இறங்கி உறங்கிகொண்டிருந்த பெண்களின் கழுத்தில் இருந்த சுமார் 30 பவுண் நிறை கொண்ட தாலிக்கொடிகளை அறுத்தெடுத்து கொள்ளையிட்டுள்ளனர்;.

இந்த கொள்ளையடிக்கப்பட்ட சம்பவங்கள் வெள்ளிக்கிழமை இரவுகளில் இடம்பெற்றுள்ளதுடன் கொள்ளையர்கள் தமது ஆள் அடையாளம் தெரியாதவாறு மிகவும் திட்டமிட்டு இந்த கொள்ளைகளில் ஈடுபட்டு வருவதாகவும் இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் இந்த கொள்ளைச் சம்பவங்கள் தொடர்பாக இதுவரை கொள்ளையர்கள் எவரையும் கைது செய்யவில்லை என பொலிசார் தெரிவித்தனர்.

இந்த தொடர் கொள்ளைச் சம்பவங்கினால் தமிழ் பிரதேசத்திலுள்ள பொதுமக்கள் தமது இரவு பொழுதினை மிகவும் அச்சத்துடன் கழித்துவருகின்றனர்

No comments: