நேற்றைய தினம் கொழும்பு மாவட்டத்திலேயே அதிகளவான தொற்றாளர்கள் அடையாளம்
நாட்டில், நேற்றைய தினம் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்ட 1,891 பேரில் 387 பேர் கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என கொவிட்-19 தடுப்பிற்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.
நாட்டில் நேற்றைய தினம் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்ட 1891 பேரில் 1014 பேர் மேல் மாகாணத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கொவிட்-19 தடுப்பிற்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையானது 111,753 ஆகவும் அதிகரித்துள்ளது .
கொழும்பு – பிலியந்தலை 81 பேர், களுத்துறை மாவட்டத்தில் 330 பேர், பாணந்துறை பகுதியில் 58 பேர் , கமீகஹதென்ன பகுதியில் 52 பேர், கம்பஹா மாவட்டத்தில் 297 பேர் , சீதுவை பகுதியில் 52, நிட்டம்புவ பகுதியில் 49, , நுவரெலியா மாவட்டங்களில் 102 பேர், புத்தளம் மாவட்டத்தில் 88 பேர், காலி மாவட்டத்தில் 80 பேர் , அனுராதபுரம் மாவட்டத்தில் 71 பேர், இரத்தினபுரி மாவட்டங்களில் 70 பேர் , கண்டி மாவட்டத்தில் 66 பேர், குருணாகல் மாவட்டத்தில் 51 பேர், கேகாலை மாவட்டத்தில் 47 பேர், திருகோணமலை மாவட்டத்தில் 45 பேர் மற்றும் மொனராகலை மாவட்டத்தில் 44 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அம்பாந் தோட்டை மற்றும் பதுளை மாவட்டங்களில் தலா 35 பேர், மாத்தறை மாவட்டத்தில் 22 பேர், பொலன்னறுவை மாவட்டத்தில் 19 பேர், மாத்தறை மாவட்டத்தில் 17 பேர், அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கிளிநொச்சி மாவட்டத்தில் 14 பேர், அம்பாறை மாவட்டத்தில் 07 பேர், முல்லைத்தீவு மாவட்டத்தில் 06 பேர், யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 05 பேர், வவுனியா மாவட்டத்தில் 03 பேர் மற்றும் மட்டக்களப்பு மாவட்டத்தில் 02 பேர் நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
வெளிநாட்டிலிருந்து வருகை தந்த 48 பேர் அடங்கலாக நேற்றைய தினம் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என கொவிட்-19 தடுப்பிற்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.
No comments: