ஐபிஎல் கிரிக்கெட் - வெற்றி பெற்றது மும்பை இந்தியன்ஸ் ....!

 


ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில், மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற்றது.

டெல்லியில் நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட்டின் 27-வது லீக் ஆட்டத்தில், சென்னை சூப்பர் கிங்ஸ் – மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. 

இதையடுத்து, கெய்க்வாட் மற்றும் டு பிளசிஸ் சென்னை அணியின் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். டு பிளசிஸ் 50 ரன்களும், மொயின் அலி 58 ரன்களும் எடுத்து வெளியேறினர்.

 பின்னர் களமிறங்கிய அம்பதி ராயுடு, 27 பந்துகளில் 4 பவுண்டரிகள் 7 சிக்சர்கள் உள்பட 72 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். ஜடேஜா 22 ரன்கள் எடுத்தார். இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 4 விக்கெட் இழப்பிற்கு 218 ரன்கள் குவித்தது.

இதனை தொடர்ந்து, 219 ரன்களை இலக்காகக் கொண்டு, மும்பை அணியின் டிகாக் மற்றும் கேப்டன் ரோகித் சர்மா தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். ரோகித் சர்மா, 35 ரன்களும், 30 ரன்களில் டிகாக்கும் வெளியேறினர். குர்ணால் பாண்டியா 32 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

அதிரடியாக விளையாடிய பொலார்ட் 34 பந்துகளில் 6 பவுண்டரிகள், 8 சிக்சர்கள் உள்பட 87 ரன்கள் குவித்து இறுதி வரை ஆட்டமிழக்கமாமல் மும்பை அணியின் வெற்றிக்கு வழிவகுத்தார். 

பின்னர், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அணி அபார வெற்றிபெற்றது.

No comments: