அங்கஜன் எம்.பியின் அழுத்தம் பெயர்பலகை மாற்றப்பட்டது !



சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஸ்மார்ட் நூலகத்திற்கு முன்பாக அமைக்கப்பட்ட சர்ச்சைக்குரிய பெயர் பலகை அகற்றப்பட்டுள்ளதாக நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார். 

நாடாளுமன்ற குழுக்களின் பிரதி தவிசாளரும் யாழ்ப்பாணம் மாவட்ட அபிவிருத்தி ஒருக்கிணைப்புக்குழுவின் தலைவருமான அங்கஜன் இராமநாதன் தமது கவனத்திற்கு கொண்டுவந்தமைக்கு இணங்க இந்த நடவடிக்கையை முன்னெடுத்ததாக நீதி அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

குறித்த ஸ்மார்ட் நூலக பெயர் பலகையானது ஆங்கிலம் சிங்களம் மற்றும் சீன மொழிகளில் பொறிக்கப்பட்டிருந்த நிலையில் புதிய பெயர் பலகை விரைவில் குறித்த இடத்தில் காட்சிப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்ட நிலையில் தமிழ் மொழி பொறித்த பெயர் பலகை மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

அத்துடன், தமிழ் மொழிக்கான அங்கீகாரம் தொடர்பிலும் (அங்கஜன் எம்.பி ) கேள்வி எழுப்பியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

No comments: