க.பொ.த. உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் மே 5ம் திகதி வெளியிடப்படும் - பரீட்சைத் திணைக்களம்
2020ம் ஆண்டுக்கான கல்வி பொது தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் மே 5ம் திகதி வெளியிடப்படும் என பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது.
முன்னதாக இப்பரீட்சை முடிவுகளை ஏப்ரல் 30க்கு முன்னர் வெளியிட திட்டமிடப்பட்டது.
2020 உயர்தரப் பரீட்சை முடிவுகள் இறுதி கட்டத்தில் உள்ளன.முடிவுகளை வெளியிடுவதற்கு முன்பு கணக்கிடப்பட்ட Zscores மதிப்பெண்கள் இருமுறை சரிபார்க்கப்பட வேண்டும் என்று பரீட்சை திணைக்கள வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்த நடவடிக்கை தற்சமயம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.செயல்முறை முடிந்ததும் முடிவுகளை மே 5 அல்லது அதற்கு முன்னர் வெளியிட முடியும் என்றும் பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.
முடிவுகளின் அடிப்படையில்,2021 செப்டம்பர் மாதத்துக்குள் மாணவர்களை பல்கலைக்கழகங்களில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்.
முடிவுகள் வெளியானதும் மாணவர்கள் கல்வி அமைச்சின் உத்தியோகபூர்வ வலைத்தளமான www.doenets.lk என்பவற்றில் பார்வையிடலாம்.
No comments: