சிறுவர்களைத் தாக்கும் புதிய வகை வைரஸ் தொற்று


சிறுவர்களிடையே பரவும் வைரஸ் தொற்று நோய் ஒன்று தற்போது பரவிக் கொண்டிருப்பதாக கொழும்பு ரிஜ்வே சீமாட்டி சிறுவர் வைத்தியசாலையின் சிறுவர் நோய் பிரிவின் விசேட வைத்தியர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.

6 வயதுக்கு குறைவான சிறுவர்களிடையே இந்த நோய் தொற்று விரைவாக பரவுவதாக குறிப்பிட்டுள்ளார்.

வாய்க்குள்ளும்,உடலின் வெவ்வேறு பகுதிகளிலும் சிவப்பு நிற புள்ளிகள் ஏற்படுதல் இந்த நோய்க்கான பிரதான அறிகுறியாகும்.

அத்துடன் சில சந்தர்ப்பங்களில் சிறுவர்களுக்கு காய்ச்சல் ஏற்படும் நிலையும் உள்ளது.

இந்நோய் நிலை காரணமாக சிறுவர்களுக்கு உணவு உட்கொள்வதில் சிக்கல் ஏற்படும்.

இந்த நோய் அறிகுறிகளுடன் அதிகளவான சிறுவர்கள் கொழும்பு ரிஜ்வே சீமாட்டி சிறுவர் வைத்தியசாலைக்கு சிகிச்சைப் பெற வருவதாக வைத்தியசாலையின் சிறுவர் நோய் பிரிவின் விசேட வைத்தியர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.

இந்த தொற்று நோய்க்கு விரைவில் சிகிச்சையளிக்காவிட்டால்,சிறுவர்களின் நகங்களும் உதிரக்கூடும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments: