நாட்டை முடக்குவது குறித்து பிரதமரின் கருத்து...!


கடந்த சில நாட்களாக கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை வழமைக்கு மாறாக அதிகரித்த போதிலும்,நாட்டின் பொருளாதாரம் மற்றும் சமூகத்துக்கு ஏற்படும் பாதிப்பை கருத்திற்கொண்டு எந்த சந்தர்ப்பத்திலும் நாட்டை முழுமையாக முடக்காதிருக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

சீன பாதுகாப்பு அமைச்சருடன் இன்று இடம்பெற்ற சந்திப்பின் போதே பிரதமர் இதனை தெரிவித்துள்ளார்.இதன்போது கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள காலப்பகுதியில் இலங்கைக்கு சீனா வழங்கிய உதவிகளுக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நன்றி தெரிவித்துள்ளார்.

No comments: