நாடளாவிய ரீதியில் அனைத்து தேவாலயங்களுக்கும் விஷேட பாதுகாப்பு
உயிர்த்த ஞாயிறு தினத்தை முன்னிட்டு நாட்டிலுள்ள அனைத்து கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் முக்கிய பகுதிகளுக்கு முப்படையினரால் பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று இன்றுடன் இரண்டு வருடங்கள் பூர்த்தியாகின்றன.
2019ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21ம் திகதி நாட்டின் பல பகுதிகளில் தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் நடத்தப்பட்டன.
கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியர் தேவாலயம்,மட்டக்களப்பு சியோன் தேவாலயம், நீர்கொழும்பு கட்டுவாப்பிட்டி தேவாலயம் என்பவற்றிலும்,ஷெங்ரிலா,கிங்ஸ்பெரி மற்றும் சினமன் லேகைஷட் உள்ளிட்ட விருந்தகங்கிலும் தாக்குதல்கள் நடாத்தப்பட்டன.
இந்த தாக்குதல்களில் வெளிநாட்டவர்கள் உட்பட 250க்கும் மேற்பட்டடோர் பலியானதோடு அதிகளவானோர் காயமடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments: