நாட்டின் இன்றைய வானிலை


நாட்டின் பல பாகங்களிலும் இன்று மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கையொன்றை வெளியிட்டு இதனை தெரிவித்துள்ளது.

இதற்கமைய மேல்,மத்திய,சப்ரகமுவ,தென்,ஊவா,வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் சில இடங்களில் மாலை அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் போது பொது மக்கள் மிக அவதானமாக செயற்படுமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.


No comments: