நாட்டில் அதிகரித்து வரும் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை


நாட்டில் மேலும் 6 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி, திவுலன்கடவல, பல்லெதவின்ன, ஹங்வெல்ல, நுகேகொடை, வத்தளை மற்றும் ஹுன்னஸ்கிரிய பிரதேசங்களை சேர்ந்த நபர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

இதனை தொடர்ந்து கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 403 ஆக உயர்வடைந்துள்ளது.

No comments: