நாடு திரும்பிய இலங்கையர்கள்
கொரோனா தொற்று காரணமாக வெளிநாடுகளில் தங்கியிருந்த 109 இலங்கையர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தை இன்று வந்தடைந்துள்ளனர்.
அதன்படி, கட்டாரிலிருந்து 28 பேர் , அவுஸ்திரேலியாவிலிருந்து 44 பேர், ஜப்பானிலிருந்து 37 பேர் கட்டு நாயக்க விமான நிலையத்தை இன்று காலை வந்தடைந்ததாக கொவிட்-19 தடுப்பிற்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.
இவ்வாறு நாட்டை வந்தடைந்த அனைவருக்கும் பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு பின்னர் அனைவரும் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளுக்காக அனுப்பப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.
இதனைத் தவிர மேலும் 600க்கும் மேற்பட்டோர் இன்றைய தினம் நாட்டுக்கு வருகை தரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, ஒமானிலிருந்து 290 பேர், உக்ரைனிலிருந்து 80 பேர் ஐக்கிய அரபு எமிரேட்ஸ், துருக்கி, இந்தோனேஷியா, ஜேர்மன், மாலத்தீவு, இத்தாலி, பங்களாதேஷ், துருக்கி, மலேசியா, சீனா, எத்தியோப்பியா, சிங்கப்பூர் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளிலிருந்து இன்றைய தினம் வருகை தரவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
No comments: