ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகளிலிருந்து வௌியேறியவர்களுக்கான முக்கிய அறிவிப்பு


ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகளிலிருந்து வௌியேறிய 3,772 பேரை எதிர்வரும் இரண்டு வாரங்களில் சேவையில் இணைத்துக்கொள்ளவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

ஆசிரியர் சேவையில் இணைத்துக்கொள்ளப்படவுள்ளவர்களுக்கான நியமனக் கடிதங்கள் அஞ்சல் மூலம் அனுப்பி வைக்கப்படும் என கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

எதிர்வரும் 11ம் திகதி பாடசாலை கல்வி செயற்பாடுகள் ஆரம்பமாவதற்கு முன்னர், ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகளில் டிப்ளோமா கற்கை நெறிகளை பூர்த்தி செய்தவர்களுக்கான நியமனம் வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

புதிய நியமனங்கள் வழங்கப்படும் ஆசிரியர்களில் 1000 பேர் தேசிய பாடசாலைகளுக்கு நியமிக்கப்படவுள்ளதுடன், ஏனைய அனைவரும் மாகாண பாடசாலைகளுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளவுள்ளதாகவும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

No comments: