நாட்டின் இன்றைய வானிலை
நாட்டின் சில பகுதிகளில் இன்றும் பலத்த மழைவீழ்ச்சி பதிவாகலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
சப்ரகமுவ, மத்திய, வட மேல் மற்றும் மேல் மாகாணங்களின் சில பகுதிகளில் இன்று 100 மில்லிமீற்றர் வரையிலான பலத்த மழை பெய்யக்கூடும் என திணைக்களத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.சில இடங்களில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்த நிலையில், இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில், தற்காலிகமாக ஏற்படும் காற்று மற்றும் மின்னல் தாக்கங்களில் இருந்து, தம்மைப் பாதுகாத்துக் கொள்ளும் வகையில் உரிய நடவடிக்கைளை மேற்கொள்ளுமாறு, வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
No comments: