இன்று நாடு திரும்பிய இலங்கையர்கள்
கொரோனா தொற்று காரணமாக வெளிநாடுகளில் நிர்க்கதிக்குள்ளாகியிருந்த 195 இலங்கையர்கள் இன்று காலை நாடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதன்படி, ஐக்கிய அரபு எமிரேட்ஸிலிருந்து 68பேர், கட்டாரிலிருந்து 45 பேர், ஜப்பானில் இருந்து 50,மாலைத்தீவிலிருந்து 24 பேர்,அவுஸ்திரேலியாவிலிருந்து 8 பேரும் கட்டுநாயக்க விமான நிலையத்தை இன்று காலை வந்தடைந்துள்ளனர்.
இவ்வாறு நாட்டை வந்தடைந்த அனைவருக்கும் பி.சி.ஆர்.பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு பின்னர் அனைவரும் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளுக்காக அனுப்பப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.
No comments: