நேற்றைய தினம் கொழும்பு மாவட்டத்தில் 130 பேர் தொற்றாளர்களாக அடையாளம்


நாட்டில் நேற்றைய தினம் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்ட 669 பேரில் 130 பேர் கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என கொவிட்-19 தடுப்பிற்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

கம்பஹா மாவட்டத்தில் 104 பேர், குருணாகல் மாவட்டத்தில் 60 பேர், காலி மாவட்டத்தில் 50 பேர் , கண்டி மாவட்டத்தில் 48 பேர், மட்டக்களப்பு மாவட்டத்தில் 38 பேர் நேற்றைய தினம் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர் .

இரத்தினபுரி மாவட்டத்தில் 31 பேர் , கேகாலை மாவ ட்டத்தில் 29 பேர், மன்னார் மாவட்டத்தில் 27 பேர், வவுனியா மாவட்டத்தில் 26 பேர், அம்பாந்தோட்டை மாவட்டத்தில் 22 பேர், மாத்தளை மாவட்டத்தில் 21 பேர், களுத்துறை மாவட்டத்தில் 20 பேர் மற்றும் மாத்தறை மாவட்டத்தில் 19 பேர் நேற்றைய தினம் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர் .

அம்பாறை மாவட்டத்தில் 16 பேர் , யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 05 பேர் , நுவரெலியா மாவட்டத்தில் 05 பேர் , புத்தள மாவட்டத்தில் 04 பேர் , அனுராதபுர மாவட்டத்தில் 03 பேர் மற்றும் மொனராகலை மாவட்டத்தில் 02 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர் .

அத்துடன் வெளிநாட்டிலிருந்து வருகை தந்த 09 பேர் அடங்கலாக நேற்றைய தினம் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர் என கொவிட்-19 தடுப்பிற்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

No comments: