பொது மக்களுக்கு,பொலிஸாரின் அறிவுறுத்தல்
சுகாதார வழிகாட்டல்களை அவசியம் பின்பற்ற வேண்டும் என்றும்,விருந்துபசாரங்களை குடும்பத்தினருடன் மாத்திரம் மட்டுப்படுத்துமாறும் பொலிஸார் மக்களை கேட்டுக்கொண்டுள்ளனர்.
நோய் தொற்றுடனேயே, 2021ம் ஆண்டில் காலடி எடுத்து வைப்பதால் எச்சரிக்கையுடன் செயற்பட வேண்டும் என பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
தொற்றை கட்டுபடுத்துவதற்கு சுகாதார நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் எனவும் பொதுப் போக்குவரத்து சேவை, சந்தைகளில் பொருட்கொள்வனவின் போது எச்சரிக்கையுடன் செயற்பட வேண்டியது மிகவும் அவசியம் எனவும் அவர் கூறியுள்ளார்.
சுமார் 9 மாதங்களாக நாட்டில் கொரோனா தொற்று காணப்படுகின்ற நிலையில், விழிப்புடன் செயற்பட்டால் மாத்திரமே அதனை முழுமையாக கட்டுப்படுத்த முடியும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
No comments: