நாட்டில் நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்கள் பற்றிய விபரம்


நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 598 பேர் நேற்றைய நாளில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இவ்வாறு நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்டவர்களில் பேலியகொடை- மினுவாங்கொடை கொத்தணியுடன்   தொடர்புடைய 541 பேரும் ,சிறைச்சாலைகளுடன் தொடர்புடைய 72  பேரும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் நேற்றைய தினம் நாடு திரும்பிய ஐந்து பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறிப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 40,380 ஆக அதிகரித்துள்ளது.

மேலும்,கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் 712 பேர் நேற்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதன்படி, நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 32,051 ஆக அதிகரித்துள்ளதென சுகாதார அமைச்சின் தொற்றுநோய் தடுப்புபிரிவு தெரிவித்துள்ளது.

இதன் அடிப்படையில் நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான 8,142பேர் தொடர்ந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 187 ஆக அதிகரித்துள்ளது.


No comments: