அரச மற்றும் தனியார் பேருந்துகளில் நடமாடும் வியாபாரங்களில் ஈடுபடத் தடை
கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக அனைத்து அரச மற்றும் தனியார் பேருந்துகளில் மேற்கொள்ளப்படும் பல வகையான விற்பனை நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சர் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு மற்றும் இலங்கை போக்குவரத்து சபைக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
விற்பனையாளர்களால் உரிய சுகாதார பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாமல் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக பயணிகளின் முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக மேலும் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர்களால் கொரோனா தொற்றுப் பரவக்கூடிய சாத்தியம் அதிகமாக காணப்படுவதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.
No comments: