தபால் ஊழியர்களின் பிரச்சினை தொடர்பில் பிரதமரின் தீர்மானம்


இன்று அலரிமாளிகையில் இடம்பெற்ற கலந்துரையாடலில்  தபால் திணைக்களத்தினுள் மேற்கொள்ளப்படும் முறையற்ற தீர்மானங்கள் தொடர்பாக தபால் ஊழியர்களுக்கு அநீதி இழைக்கப்படுவதாக இலங்கை தபால் தொழிற்சங்கங்களின் முன்னணி பிரதமரிடம் கோரிக்கை வைத்தது.

அதன்படி அந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்குவதற்காக புதிய சேவை அரசியலமைப்பு ஒன்று தயாரிக்க வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது.

எனினும் 2015ம் ஆண்டு நல்லாட்சி அரசாங்கம் அதிகாரத்திற்கு வந்ததை அடுத்து அதனை செயற்படுத்தவில்லை என இலங்கை தபால் தொழிற்சங்கங்களின் முன்னணி பிரதமருக்கு மேலும் தெரிவித்தது.

அதன்படி முன்வைத்தப் பிரச்சினைகள் தொடர்பில் அமைச்சரவையுடன் கலந்துரையாடலை மேற்கொண்டு தீர்வு வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பதாக பிரதமர் இதன்போது தெரிவித்துள்ளார். 

No comments: